லூலுவின், “ஆத்ரேலியர்களின் மனிதம்” குமரிப்
படைப்பாளர்களை ஆத்திரமடையச் செய்தன!
23.12.2017 அன்று
நாகர்கோவில் பாபுசி நிலையம் அரங்கில்,
‘இலைகள் இலக்கிய இயக்கம்’
சார்பாக நடைப்பெற்ற வாராந்திர நிகழ்வில், “ஆத்ரேலியர்களின்
மனிதம்” பற்றி ஆத்ரேலியா குடிமகள்
லூலு உரையாற்றினார். லூலு தேவ சம்லா குறித்து சீவா
அறிமுகவுரை நிகழ்த்தியபோது, குளச்சல் அருகிலுள்ள உடையார்விளை ஊரில் பிறந்து ஆத்ரேலிய
குடியுரிமை பெற்றவர் லூலு. உதவி பேராசிரியையாக இந்தியாவிலும் ஆத்ரேலியாவிலும்
பணியாற்றியதை தொடர்ந்து, தற்பொழுது
ஆத்ரேலியா வடக்கு மாகாண அரசு மருத்துவமனை நிர்வாக அலுவலகராக பணியாற்றி வருகிறார்
என்றார். லூலுவின் உரையிலிருந்து...
"ஆயிரக்கணக்கான மொழிகள்
இருந்தும் ஆத்ரேலிய பூர்வகுடியினருக்கு ஒரு மொழிக்குக்கூட எழுத்து வடிவம்
கிடையாது" - இது லூலுவின் கண்டுபிடிப்பு. பெண்கள் கதை விடுவதில்
கில்லாடிகள்தான். அவர்கள் அடிக்கடி தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதால்
இப்படிப்பட்ட காய் நகர்த்தல் அவர்களுக்கு சாத்தியமாகின்றன. அவ்வகையில் லூலு அடித்த
அதிபயங்கரமான கப்சாதான் ஆத்ரேலியாவில் ஆயிரம் மொழிகள் இருந்தன. வெளிநாட்டில் அடிமை
வேலை செய்துவிட்டு இந்தியாவுக்கு வரும்போது பீத்துப் பெருமை பேசுவது வழக்கம்தானே.
அப்படித்தான் லூலுவின் கப்சாவை இலக்கியவாதிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
“ஆத்ரேலியாவில் பெண்கள்
எத்தனை பேரை திருமணம் செய்தாலும் ஒரே நேரத்தில் அவர்கள் ஒரு நபரோடு மட்டுமே உறவில்
இருப்பதாகவும், இந்தியர்களைபோல், ஒரே நேரத்தில் பலரோடு திருமணம் செய்துக் கொள்ள
மாட்டார்கள், துரோகம் என்பது அங்கு
கிடையாது” – இதுவும் லூலுவின்
பெருமைமிகுக் கண்டுபிடிப்பு. ஆத்ரேலியாவில் பெண்கள் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும்
திருமணம் என்கிற போர்வையில்தான் பாலுணர்வைப் பருகுவார்களாம். சட்டை அழுக்கானால்
தூக்கி வீசுவதுபோல்தான். அதுதான் உறவுக்கான அழகாம். ஏன் தெரியுமா? “ஒரே நேரத்தில் அவர்கள் ஒரு நபரோடு மட்டும்தான் உறவில்
இருப்பார்களாம்”. “இந்தியர்கள்போல் ஒரே
நேரத்தில் பலரோடு திருமணம் செய்துகொள்ள மாட்டார்களாம்”.
‘இலைகள்’ அமைப்பில் வந்திருந்த யாராவது ஒருவரைக் குறிவைத்து
தாக்கியிருப்பாரோ என்று ஆலோசித்தேன். அப்படி யாரும் திருமணம் செய்திருப்பதாகத்
தெரியவில்லை. அதன்பிறகுதான் தெரிய வந்தது,
சில
இசுலாமியர்கள் கூட்டத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். ஒருவேளை இசுலாமிய
சமயத்தைத்தான் அவர் தாக்கிப் பேசியிருப்பாரோ என்கிற எண்ணம் தோன்றியது. “பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டு இரண்டாகவோ, முன்று மூன்றாகவோ,
நான்கு
நான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளுங்கள்” எனக்
குரான் சொல்கிறது அல்லவா?
“சமீபத்தில்
ஆத்ரேலியாவில் ஒருபாலின திருமணம் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது” குறித்து லூலு இரட்டை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஏன் தெரியுமா? “ஆத்ரேலியாவில் எத்தனை
பேரை திருமணம் செய்தாலும் ஒரே நேரத்தில் அவர்கள் ஒரு நபரோடு மட்டுமே உறவில்
இருப்பதாகவும், இந்தியர்களைபோல், ஒரே நேரத்தில் பலரோடு திருமணம் செய்துக் கொள்ள
மாட்டார்கள். துரோகம் என்பது அங்கு கிடையாது”.
இந்தியர்கள்
துரோகிகள். குடும்ப விசயத்தில் ஆத்ரேலியாவைப் பின்பற்றாமல் இருக்கிறார்கள்.
துரோகிகள் கூடாரத்தில் அமர்வது அழகல்ல என்பதால்தான் லூலு, ஆத்ரேலியா குடியுரிமைப் பெற்றிருக்கிறார். அதனால் அவரைப்
பாராட்டுவோம். ஆம்! ஒரே நேரத்தில் ஒரு நபரோடு மட்டும்தான் உறவில் இருந்து, பின்பு கைவிட்டு இன்னொருவரோடு உறவில் இருப்போம். இப்படி
இப்படியாக உறவில்... இதுதான் ஆத்ரேலியா ஒழுங்கமைப்பு.
இப்படி உறவு உறவு வழியாக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு
போனால் அக்குழந்தைகளை யார் பராமரிப்பார்கள்?
ஆத்ரேலியாவில், “திருமண உறவு முறிந்து தனித்து வாழும் பெண்களின்
குழந்தைகளை அவர்களால் வளர்க்க முடியாத பட்சத்தில் அரசாங்கம் பொறுப்பேற்று
கவனித்துக் கொள்ளும்”. நாங்கள் பெற்றுவிட்டு
குழந்தையை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுவோம். அதன்பிறகு நாங்கள் வேறு ஒருவருடன்
திருமணம் செய்து உடலுறவு கொள்வோம். இதுவல்லவா உறவு. எவ்வளவு அற்புதமான உறவு? இங்க இருக்கிறவர்கள் பெரும்பாலும் ஒருத்தியோடு, ஒருத்தனோடு இருப்பதால்தான் வாழ்க்கை துருபிடித்துக் காணப்படுகிறது.
குடும்பப் பிரச்சனைகள் உருவாகிறது. ஆத்ரேலியாவில் அப்படி இல்லை. உடனடியாக உறவை
கழற்றி விட்டுவிட்டு இன்னொரு திருமணம் மூலம் இன்னொரு உறவை உருவாக்கிக் கொள்வோம்.
இந்தியர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள். ஆத்ரேலியாவின் பெருமை
ஆர்ப்பரிப்பில் அடங்கி இருக்கிறது. இதனை இந்தியாவில் நடைமுறைப் படுத்துவது
குறித்து சிந்திக்க வேண்டும்.
“இந்தியாவில்
பெரியவர்களாக வளர்ந்த பின்பும் அவர்களை குழந்தைகளாகவே பார்க்கும் நிலைமை உள்ளது” – லூலு. ஆத்ரேலியாவில் குட்டிகள் வளர்ந்த பிறகு அது தானே
அதற்கான உறவைத் தேடிக் கொள்ளும். தன்னுடைய காலில் நிற்கும். இந்தியாவில் குட்டிகள்
வளர்ந்த பிறகும் அம்மா, அப்பா என இன்னும் உறவு
கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பெற்றோர்களும் மோனே, மோளே
என உறவு முறையில் வாழுகின்றனர். இந்த கலாச்சாரம் ஏற்கத் தகுந்தது அல்ல. வேறு
உறவுகளை நாடுவதற்கு இது தடையாக இருக்கிறது. அதனால்தான் குழந்தைகளை அரசிடம்
ஒப்படைத்துவிடும் போக்கு இந்தியாவில் வளர வேண்டும்.
குடும்பத்திற்கிடையான ஒட்டுதலை வைத்துதான் இந்தியாவில்
பெண்களை ஆண்கள் மிரட்டுகிறார்கள். அந்த ஒட்டுதல் இல்லாததால்தான் ஆத்ரேலியர்கள்
யாரும் யாரையும் மிரட்டுவதில்லை. பெண்ணுரிமை அங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது. ஒரு
உறவு சரியில்லை என்றால் இன்னொரு உறவு. எவ்வளவு அற்புதமான குடும்ப உறவு தெரியுமா? இதனை நாய் உறவு என்று நீங்கள் சொல்ல முடியாது. நாய்கள்
திருமணம் செய்வதில்லை. ஆத்ரேலியர்கள் திருமணம் செய்துதான் உறவு கொள்வார்கள்.
இப்படி திருமணம் மூலம் எத்தனை உறவுகளையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரே நேரத்தில் ஒரு உறவு. இந்தியர்களைப்போல ஒரே நேரத்தில்
பலரோடு திருமணம் அல்ல.
வாரிசுரிமை சட்டம்
ஆத்திரேலியாவில் கிடையாது. நாங்கள்தான் குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்து விட்டோமே.
குழந்தைகளை வைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தால் இன்னொரு ஆணை திருமணம் செய்து
மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமில்லை. இந்தியாவிலும் இப்படிப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட
வேண்டும். ‘இலைகள்’ இலக்கிய அமைப்பானது இதற்கான பரிந்துரையை இந்தியப்
பிரதமருக்கு அனுப்பி வைக்குமா? சீவா, இதற்கான பணியினை முன்னெடுத்துச் செல்வாரா? லூலுவின் ஆத்ரேலியா பாணியில் இந்தியா நடைபோடுமா? லூலூலூ....
சிவ அடியார் திருத்தமிழ்த் தேவனாரின் விமர்சனத்திற்கு
எதிர்வினை ஆற்றியிருக்கிறார் லூலூ... இதோ,
உங்கள்
பார்வைக்கு...
நாகர்கோவிலைச் சேர்ந்த மிகப்பெரும் புகழ்வாய்ந்த சமூக
ஆர்வலர், மா
மா பெரும் எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதி, சூப்பர் சிந்தனையாளர்
ஒருவரின் ஒரு மிக நீண்ட பதிவின் முதல் பகுதி இது:
//இந்தியாவைவிட ஆத்ரேலியா
சிறந்தது - லூலு காட்டம். 23.12.2017அன்று நாகர்கோவில்
பாபுசி நிலையம் அரங்கில் ஆத்ரேலியா குடிமகள் லூலு உரையாற்றினார். அதிலிருந்து....
"ஆயிரக்கணக்கான மொழிகள்
இருந்தும் ஆத்ரேலிய பூர்வகுடியினருக்கு ஒரு மொழிக்குக்கூட எழுத்து வடிவம்
கிடையாது" – லூலுவின்
கண்டுபிடிப்பு. பெண்கள் கதை விடுவதில் கில்லாடிகள்தான். அவர்கள் அடிக்கடி
தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதால் இப்படிப்பட்ட காய் நகர்த்தல் அவர்களுக்கு
சாத்தியமாகின்றன. அவ்வகையில் லூலு அடித்த அதிபயங்கரமான கப்சாதான் ஆத்ரேலியாவில்
ஆயிரம் மொழிகள் இருந்தன. வெளிநாட்டில் அடிமை வேலை செய்துவிட்டு இந்தியாவுக்கு
வரும்போது பீத்துப் பெருமை பேசுவது வழக்கம்தானே. அப்படித்தான் லூலுவின் கப்சாவை
இலக்கியவாதிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.//
என் பதில்:- ஆத்ரேலிய பழங்குடியினரிடையே ஆதியில்
ஆயிரக்கணக்கில் பழக்கத்திலிருந்தது எனக் கூறப்படும் எழுத்து வடிவமற்ற மொழிகள், பின்னர் அழிந்து, 18-ஆம்
நூற்றாண்டில் 250 மட்டுமே எஞ்சியது என ஆங்கிலேயரால் அடையாளம் காணப்பட்டன. 1788
முதல்
ஆஸ்திரேலியாவில் குடியேறத் துவங்கிய ஆங்கிலேயரால், ஆங்கில மொழியின்
தாக்கத்தால் அவையும் அழிக்கப்பட்டு தற்போது 100-க்கும்
அதிகமானோரால் பேசப்படும் பழங்குடியின மொழிகள் வெறும் 48 மட்டுமே என அடையாளம்
காணப்பட்டுள்ளது. இவற்றிற்கும் இன்றுவரை எழுத்து வடிவம் இல்லை. கிரோல் எனப்படும் ஒரேயொரு மொழியில் மட்டுமே கிறித்தவர்களின்
புனித நூலான விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுவும் ஆங்கில எழுத்துக்களை
அடிப்படையாய் வைத்தே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதால் முழுமையாய் அதை எழுத்து
வடிவமுள்ள ஒரு முழுமையான பழங்குடியின மொழியாய் எடுத்துக் கொள்ள இயலாது என்பது
இலக்கிய அறிஞர்களின் கருத்து. பிகு: ஆதாரம் தேவைப்படுவோர் மெனக்கெட்டு தேடி
எடுத்துக் கொள்ளவும்! நன்றிகள்.
பிபிகு: அந்த பதிவின் பிற்பகுதி இது... //“ஆத்ரேலியாவில் பெண்கள்
எத்தனை பேரை திருமணம் செய்தாலும் ஒரே நேரத்தில் அவர்கள் ஒரு நபரோடு மட்டுமே உறவில்
இருப்பதாகவும், இந்தியர்களைபோல், ஒரே நேரத்தில் பலரோடு
திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்கள், துரோகம் என்பது அங்கு
கிடையாது” – இதுவும் லூலுவின் பெருமைமிகுக் கண்டுபிடிப்பு.
ஆத்ரேலியாவில் பெண்கள் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் என்கிற
போர்வையில்தான் பாலுணர்வைப் பருகுவார்களாம். சட்டை அழுக்கானால் தூக்கி
வீசுவதுபோல்தான். அதுதான் உறவுக்கான அழகாம். ஏன் தெரியுமா? “ஒரே நேரத்தில் அவர்கள்
ஒரு நபரோடு மட்டும்தான் உறவில் இருப்பார்களாம்”. “இந்தியர்கள்போல் ஒரே
நேரத்தில் பலரோடு திருமணம் செய்துகொள்ள மாட்டார்களாம்”.
‘இலைகள்’ அமைப்பில் வந்திருந்த
யாராவது ஒருவரைக் குறிவைத்து தாக்கியிருப்பாரோ என்று ஆலோசித்தேன். அப்படி யாரும்
திருமணம் செய்திருப்பதாகத் தெரியவில்லை. அதன்பிறகுதான் தெரிய வந்தது, சில இசுலாமியர்கள்
கூட்டத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். ஒருவேளை இசுலாமிய சமயத்தைத்தான் அவர்
தாக்கிப் பேசியிருப்பாரோ என்கிற எண்ணம் தோன்றியது. “பெண்களில் உங்களுக்கு
விருப்பமானவர்களை இரண்டு இரண்டாகவோ, முன்று மூன்றாகவோ, நான்கு நான்காகவோ
நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளுங்கள்” எனக் குரான் சொல்கிறது
அல்லவா?
“சமீபத்தில்
ஆத்ரேலியாவில் ஒருபாலின திருமணம் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது” குறித்து லூலு இரட்டை
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஏன் தெரியுமா? “ஆத்ரேலியாவில் எத்தனை
பேரை திருமணம் செய்தாலும் ஒரே நேரத்தில் அவர்கள் ஒரு நபரோடு மட்டுமே உறவில்
இருப்பதாகவும், இந்தியர்களைபோல், ஒரே நேரத்தில் பலரோடு
திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்கள். துரோகம் என்பது அங்கு கிடையாது”. இந்தியர்கள் துரோகிகள்.
குடும்ப விசயத்தில் ஆத்ரேலியாவைப் பின்பற்றாமல் இருக்கிறார்கள். துரோகிகள்
கூடாரத்தில் அமர்வது அழகல்ல என்பதால்தான் லூலு, ஆத்ரேலியா குடியுரிமைப்
பெற்றிருக்கிறார். அதனால் அவரைப் பாராட்டுவோம். ஆம்! ஒரே நேரத்தில் ஒரு நபரோடு
மட்டும்தான் உறவில் இருந்து, பின்பு
கைவிட்டு இன்னொருவரோடு உறவில் இருப்போம். இப்படி இப்படியாக உறவில்... இதுதான்
ஆத்ரேலியா ஒழுங்கமைப்பு.
இப்படி உறவு உறவு வழியாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு
போனால் அக்குழந்தைகளை யார் பராமரிப்பார்கள்? ஆத்ரேலியாவில், “திருமண உறவு முறிந்து
தனித்து வாழும் பெண்களின் குழந்தைகளை அவர்களால் வளர்க்க முடியாத பட்சத்தில்
அரசாங்கம் பொறுப்பேற்று கவனித்துக் கொள்ளும்”. நாங்கள் பெற்றுவிட்டு
குழந்தையை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுவோம். அதன்பிறகு நாங்கள் வேறு ஒருவருடன்
திருமணம் செய்து உடலுறவு கொள்வோம். இதுவல்லவா உறவு. எவ்வளவு அற்புதமான உறவு? இங்க இருக்கிறவர்கள்
பெரும்பாலும் ஒருத்தியோடு, ஒருத்தனோடு
இருப்பதால்தான் வாழ்க்கை துருபிடித்துக் காணப்படுகிறது. குடும்பப் பிரச்சனைகள்
உருவாகிறது. ஆத்ரேலியாவில் அப்படி இல்லை. உடனடியாக உறவை கழற்றி விட்டுவிட்டு
இன்னொரு திருமணம் மூலம் இன்னொரு உறவை உருவாக்கிக் கொள்வோம். இந்தியர்கள் எவ்வளவு
முட்டாள்களாக இருக்கிறார்கள். ஆத்ரேலியாவின் பெருமை ஆர்ப்பரிப்பில் அடங்கி
இருக்கிறது. இதனை இந்தியாவில் நடைமுறைப் படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும்.
“இந்தியாவில்
பெரியவர்களாக வளர்ந்த பின்பும் அவர்களை குழந்தைகளாகவே பார்க்கும் நிலைமை உள்ளது” – லூலு. ஆத்ரேலியாவில்
குட்டிகள் வளர்ந்த பிறகு அது தானே அதற்கான உறவைத் தேடிக் கொள்ளும். தன்னுடைய
காலில் நிற்கும். இந்தியாவில் குட்டிகள் வளர்ந்த பிறகும் அம்மா, அப்பா என இன்னும் உறவு
கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பெற்றோர்களும் மோனே, மோளே என உறவு முறையில்
வாழுகின்றனர். இந்த கலாச்சாரம் ஏற்கத் தகுந்தது அல்ல. வேறு உறவுகளை நாடுவதற்கு இது
தடையாக இருக்கிறது. அதனால்தான் குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்துவிடும் போக்கு
இந்தியாவில் வளர வேண்டும்.
குடும்பத்திற்கிடையான ஒட்டுதலை வைத்துதான் இந்தியாவில்
பெண்களை ஆண்கள் மிரட்டுகிறார்கள். அந்த ஒட்டுதல் இல்லாததால்தான் ஆத்ரேலியர்கள்
யாரும் யாரையும் மிரட்டுவதில்லை. பெண்ணுரிமை அங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது. ஒரு
உறவு சரியில்லை என்றால் இன்னொரு உறவு. எவ்வளவு அற்புதமான குடும்ப உறவு தெரியுமா? இதனை நாய் உறவு என்று
நீங்கள் சொல்ல முடியாது. நாய்கள் திருமணம் செய்வதில்லை. ஆத்ரேலியர்கள் திருமணம்
செய்துதான் உறவு கொள்வார்கள். இப்படி திருமணம் மூலம் எத்தனை உறவுகளையும் வைத்துக்
கொள்ளலாம். ஆனால், ஒரே
நேரத்தில் ஒரு உறவு. இந்தியர்களைப்போல ஒரே நேரத்தில் பலரோடு திருமணம் அல்ல.
வாரிசுரிமை சட்டம் ஆத்திரேலியாவில் கிடையாது.
நாங்கள்தான் குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்து விட்டோமே. குழந்தைகளை வைத்து வாழ்க்கை
நடத்திக் கொண்டிருந்தால் இன்னொரு ஆணை திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருப்பது
சாத்தியமில்லை. இந்தியாவிலும் இப்படிப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ‘இலைகள்’ இலக்கிய அமைப்பானது
இதற்கான பரிந்துரையை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்குமா? சீவா, இதற்கான பணியினை
முன்னெடுத்துச் செல்வாரா? லூலுவின்
ஆத்ரேலியா பாணியில் இந்தியா நடைபோடுமா? லூலூலூ....//
இந்த பதிவிட்டிருக்கும்
நபர் அன்று அந்த இலக்கிய கூட்டத்தில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாமல்
இடையிலேயே வெளியேறியவர் என்பதும், தற்போது இவருடைய இந்த
நீண்ட பதிவு, ஆத்ரேலியாவைக்
குறித்து நான் அளித்த சில உண்மைத் தகவல்களில் காணப்பட்ட நிதர்சனத்தைத் தாங்கிக்
கொள்ள இயலாமல் ஆற்றியிருக்கும் எதிர்வினைக் கதறல் மட்டுமே என்பதும்
குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கான பதில் விளக்கத்தை நான் கொடுக்கத் தேவைப்படவில்லை!
பிபிபிகு: ஆம்! என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவை விட
ஆத்ரேலியா எல்லா வகையிலும் சிறந்ததே! 30 வருடங்களாய்
இந்தியாவில் உணராத சமத்துவத்தை நான் 11 வருடங்களாய்
ஆத்ரேலியாவில் உணர்கிறேன்! லுலு தேவ சம்லா. 28.12.2017, 9:17 காலை.
அதன்பின்பாகவும்
தூக்கம் இழந்த நிலையில் லூலூவின் பதிவுகள் முகநூலில் தொடர்ந்தன... அவரின் பதிவுகள்
மீண்டுமாக... இலைகள் இலக்கிய கூட்டத்தில் என்னுடைய பேச்சு முடிந்தபின் நடந்த
கலந்துரையாடலில் நான் அளித்தப் பதில்களின் தொகுப்பு இது.
“ஆத்ரேலியாவில் ஒரே
நேரத்தில் ஒரேயொரு இணையுடனே சந்தோசமாய் வாழ்கிறார்கள். சமூக கட்டாயத்திற்காய்
நிம்மதியில்லாத வாழ்க்கைப் பிணைப்பில் அவர்கள் நீடிப்பதில்லை. அதுபோல, ஒருவருக்கு ஒரே நேரத்தில் பல மனைவிகள் அங்கு கிடையாது.
பெண்களும் ஆண்களும் தங்களுடைய இணைகளை தாங்களே தேடிக்
கொள்ளும் உரிமை இருப்பதாலும், எப்போது வேண்டுமாயினும்
இணையுறவை முறித்துக் கொள்ளலாம் என்னும் சுதந்திரம் இருப்பதாலும் “கள்ள
உறவுகள்”, “துரோகங்கள்” நடப்பதில்லை.
அரசாங்கத்திடமிருந்து குழந்தைகளுக்கான பராமரிப்பு உதவி கிடைப்பதால், ஆத்ரேலியாவில்
இணையை பிரிந்து வாழும் தனித் தாய்மார் மற்றும் வேறு இணையை தேடிக்
கொள்ளும் தாய்மார், வாழ்க்கையை சிரமமின்றி
எதிர்கொள்ள முடிகிறது.
மேலும், ஆத்ரேலியாவில் குழந்தைகள்
சுயசார்புடையோராய் வளர்க்கப்படுவதால் 18 வயது ஆன உடனே அவர்கள்
தங்கள் பெற்றோரின் ஆதரவின்றி தனித்து வாழத் துவங்கி விடுகிறார்கள். இதற்காய்
அவர்களை தயார்படுத்துவதே அங்கு பெற்றோரின் முக்கிய கடமையாய் உள்ளது. குழந்தைகள்
இளவயதிலேயே தங்கள் வாழ்க்கையை தனியே அமைத்துக் கொள்வதால் அதற்கு பின்
பெற்றோருக்கும் சுயசார்பு தன்மை வெகுவாய் பழகி விடுகிறது. ஆகவே வயதான பின்பும்
அவர்கள் தனிமையை உணராமல் வாழ்க்கையை இயல்பாய் கழிக்க முடிகிறது. தங்களால் இயல்பு
வாழ்க்கை வாழமுடியாத வயோதிக நிலை வரும்போது தாங்களாகவே மூத்த குடிமக்கள்
பராமரிப்பு இல்லத்தில் சென்று சேர்ந்து கொள்கிறார்கள்.
வாரிசுரிமைச் சட்டத்தைக் குறித்து முழுமையாய் தெரியாது
எனக்கு. நான் பார்த்தவரையில் ஆத்ரேலிய வெள்ளையினத்தவர் தாங்கள் சம்பாதிக்கும்
சொத்துக்களை தங்கள் கடைசிக் காலத்தில் ஓய்வு
வாழ்க்கையின்போது நன்றாக வாழ பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள்
மறைவுக்குப்பின் மிஞ்சும் சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பதை உயில் எழுதி
வைத்து விடுகிறார்கள். உயில் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்களின் குழந்தைகள்
அரசாங்கத்தில் முறையிட்டு, தாங்கள்தான் மறைந்த நபரின்
நேரடி வாரிசுகள் என்பதை தகுந்த ஆவணங்களோடு நிரூபித்து, அரசு
மேற்பார்வையில் சொத்துக்களை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள வகையுண்டு.
இந்த தகவல்களில்
யாருக்கேனும் ஏதேனும் பாகம் புரியவில்லையெனில் இந்த பதிவின் கீழோ அல்லது தங்களின்
மேன்மை பொருந்திய நேர நேர்கோட்டிலோ தெரிவிக்குமாறு மரியாதை கலந்த பணிவுடன்
கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
பிகு:- இங்க சிலரை மாதிரி அதிமேதாவிகளின்
அதிபுத்திசாலித்தனமான தொடர் விமர்சனங்களே என்னுடைய சொந்த வளர்ச்சிக்கும், முகநூலில்
மேலும் பிரபலமடைவதற்கும் வழி வகுக்கும் என்பதால்,
அடுத்தமுறை
விமர்சனப்பதிவு எழுதும்போது அதனை என் பதிவில் பதியுமாறு செய்து விடவும்.
இப்படிக்கு, பயத்துடனும், மரியாதையுடனும், வெளிநாட்டில் அடிமை வேலைப்பார்த்து விட்டு இந்தியாவில்
வந்து கப்சா விட்டுத்திரியும் மிகச் சாமான்ய பெண், லுலு தேவ சம்லா. 28.12.2017
11:08 காலை.
11:08 காலை.
பெண்ணுரிமை சார்ந்து
லூலு கொண்டிருக்கும் கருத்து ஏற்கத் தகுந்தது அல்ல. அதன் ஒருபகுதியாக
விவிலியத்தில் இருந்து லூலு வைக்கிற முகநூல் பதிவானது பார்வையாளர்களை
வித்தியாசமடையச் செய்யும். லூலு சொல்வது சரிதான் என்பதுபோல் தோன்றும். ஏனெனில்
விவிலியத்தில் உள்ள பழைய ஏற்பாடும், பவுலின் கடிதங்களும் பெண்ணை
அடிமைப்படுத்துகின்றன என்பது உண்மைதான். அதன் ஒருபகுதியாக, “இயேசுவின் போதனைகளை
மட்டும் கடைபிடிச்சா போதும்னா இன்னும் என்ன மயித்துக்குடே வேதாகமம்னு 66 புத்தகங்களை
தூக்கிகிட்டு திரியிதிய?” என்கிற கேள்வியை லூலு ஆவேசமாக முன்வைக்கிறார். லூலு
சொல்வதனைப் பாருங்கள்:
"உலகமே
எதிர்கேள்வியின்றி ஏற்றுக்கொண்டிருக்கும் கிறித்தவ பக்தி மார்க்கத்தை (அதை
வலியுறுத்தும் புனித வேதாகமத்தை) எதிர்த்து கேள்வி கேட்பது மடத்தனமாம். சரி
நான் மடத்தனமாவே நடந்துக்கிறேன் இருக்கட்டும், முதலாம் நூற்றாண்டில்
உலகமே ஏற்றுக்கொண்டு இருந்த யூத மதக் கோட்பாடுகளை முதன்முதலாய் எதிர்த்து புரட்சி
செய்தவர் இயேசு. அவரையும் அப்ப மடத்தனமாய் நடந்துகிட்டார்னு சொல்லுவீக போலயே!
ஓய்வு நாளில் அங்க இங்க அசையப்பிடாதுன்னு சொன்ன மோசேயின்
கற்பனைகளையே மீறினவரு இயேசு. அதெல்லாம் தேவனுடைய கட்டளைகள்னா தேவமைந்தன் ஏன்
அதையெல்லாம் மீறினாரு?
யூதமதச் சட்டப்படி மாதவிடாய் தீட்டுன்னு சொல்லி பெண்களை
ஒதுக்கி வச்சிருந்த அந்த சமூகத்துல, வருசக்கணக்கா நிக்காத
உதிரப்போக்கோட தன்கிட்ட வந்த பெண்ணை தன்னை தொட அனுமதிச்சிருக்காரு உங்க ஆண்டவரு!
தொழுநோயாளியை தொட்டா இன்னின்ன மாதிரி பரிகாரம் காணிக்கை
செலுத்தணும்னு எழுதி வச்சிருக்கு உங்க புனித பழைய ஏற்பாட்டு ஆகமத்துல. இயேசு தொழுநோயாளிகளை
தொட்டு தூக்கி அரவணைச்சாரு. அதுக்கு பரிகாரம் பண்ணின மாதிரி வேதம் சொல்லல. அப்ப
அவுரு இதுலயும் வேதாகம சட்டத்தை மீறியிருக்காரு.
உண்மையான கிறித்தவனா இந்த உலகத்துல வாழ்ந்து செத்து
பரலோகத்துக்கு போணும்னா வேதம் கூறும் அத்தனையும் நாம கடைபிடிக்கணுமா? ஏன் இயேசுவின் போதனைகளை
மட்டும் கடைபிடிச்சா போதாதா?
அப்படி இயேசுவின்
போதனைகளை மட்டும் கடைபிடிச்சா போதும்னா இன்னும் என்ன மயித்துக்குடே வேதாகமம்னு 66 புத்தகங்களை
தூக்கிகிட்டு திரியிதிய? தூக்கி
கடாசுங்க பார்ப்போம்! செய்ய மாட்டிய! ஏன்னா அப்படி செய்தா கிறித்தவ பக்தி
மார்க்கம்ங்கிற பேருல நீங்க பார்த்துகிட்டு இருக்கிற தில்லாலங்கடி வேலையோட
சாயமெல்லாம் வெளுத்திரும். பொம்பளையள பக்திய காட்டி பயமுறுத்தி வச்சிட்டிருக்கிற
உங்க பப்பெல்லாம் வேவாம போயிரும்! அப்பறம் எப்படி சபைன்னு வச்சு வியாபாரம் பண்ணி
நாலு காசு சம்பாதிக்கிறது? ஒங்க
பொழப்பு முட்டி போயிருமுல்ல! சும்மா என் வாய
புடுங்காம மூடிகிட்டு போங்கடே! லுலு தேவ சம்லா, 26/12/2017, 12:01 காலை".
லூலு முன்வைத்திருக்கும் கருத்துக்கள் நியாயமானதாகத்
தோன்றும். ஆம்! நியாயமானதுதான். இந்த இடத்தில் லூலுவுக்கு திருத்தமிழ்த் தேவானார்
முன்வைக்கும் கேள்வி கணை ஒன்று இருக்கிறது.
லூலு, ஆண் பெண் சமத்துவ உரிமை
பற்றிப் பேசுகிறார். நல்லதுதான்; வேண்டியதுதான்.
"திருநங்கை ஆயராகலாமா?" என "பள்ளம்துறை" நூலில் கட்டுரை வடித்தவர் சிவ
அடியார் திருத்தமிழ்த் தேவனார். ஆண் பெண் சமத்துவ உரிமை குறித்து தெற்கு
எழுத்தாளர் இயக்கமானது நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம்
நடத்தியிருக்கிறது. லூலுவின் கருத்தைப்போன்று கல்யாணம் என்கிற பெயரில்
எத்தனை ஆண்களையும் மாற்றலாம்; உறவு கொள்ளலாம்
என்பதற்கு அல்ல. "கற்பை பொதுவில் வைப்போம்" என்கிற பாரதியாரின்
கொள்கையில் திருத்தமிழ்த் தேவனார் உறுதியாக இருக்கிறார்.
"திருமணம் பெண்ணை
அடிமைப்படுத்துகிறது. அதனால் திருமணத்தை குற்றமாக அறிவிக்க வேண்டும்" என
சொன்ன ஈ.வே. இராமசாமி நாயக்கர், 99 வயதில் 36 வயதுப் பெண்ணை திருமணம்
செய்து அடிமையாக்கினார்.
திருமணம் என்கிற
பெயரில் நேரத்திற்கு நேரம் உறவை மாற்றிக் கொள்ளலாம் என்பதே இயேசுவின் சித்தாந்தத்தின்படி
விபசாரம்தான். லூலுவின் பதிவு யோக்கியமானதாக இருக்கலாம். இயேசுவின் வசனம் போதுமே
எனலாம். விவிலியத்தின் இதர நூல்கள் எதற்கு என முழக்கமிடலாம். சிவ அடியார்
கேட்கிறார், பரத்தமைக்காக
அன்றி தனது மனைவியை அல்லது கணவனை விலக்கிவிட்டு வேறொரு திருமணம் செய்தால் அது
விபசாரம் என இயேசு சொல்லியிருக்காரே.
விவாகரத்துகளை
கண்மூடித்தனமாக அங்கீகரித்துவிட்ட அத்ரேலியா, விபசாரத்தை அரங்கேற்றும் நாடாக உருமாறிவிட்டது
என்பதனை லூலு தெரிந்துகொள்ள வேண்டும். அதில்போய் பெண்ணுரிமையைத் தேட இயலாது என்பதனையும்
அறிந்துகொள்ள வேண்டும். "இயேசுவின் போதனைகளை மட்டும் கடைபிடிச்சா போதும்னா
இன்னும் என்ன மயித்துக்குடே வேதாகமம்?" என்கிற லூலூவிடம் கேட்கிறேன், இயேசுவின் போதனைகள் மட்டுமே போதும்
என்றால் விபசாரம் என்கிற பெயரில் என்ன மயிருக்கு இன்னொரு திருமணம்? யோக்கியரே
வாருங்கள்! பதிலளியுங்கள்!
No comments:
Post a Comment